யாழில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது - 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Family Member Died Motorcycle Collided Van Jaffna

இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் - பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார் சைக்கிள் கைப்பிடி தட்டுப்பட்டு அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.

இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை (25) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.