யாழில் விபரீத முடிவால் இளைஞர் உயிரிழப்பு

யாழில் விபரீத முடிவால் இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் வீட்டில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கோபிசன் வயது 28 என்ற இளைஞரே   உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.  

யாழில் விபரீத முடிவால் இளைஞர் உயிரிழப்பு | Youth Lost His Life Due Unfortunate Decisionநேற்றைய தினம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்தர தீர்த்தத்திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்று விட்டு இரவு 10:00 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இளைஞனின் உயிரிழப்புக்கான  காரணம் வெளியாகாத  நிலையில்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.