அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2025 ஜனவரி முதல் ரூ.12,500 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன (Udaya R Seneviratne) தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதய ஆர். செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Salary And Cost Of Living Allowance For Pensioners

தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், அரச சேவையின் வினைத்திறனையும் செயற்திறனையும் விருத்தி செய்து மக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் விஞ்ஞான ரீதியில் வேலை ஆய்வு (Work Study) நடத்தப்பட்டு உரிய வகையில் அரச சேவையை மறுசீரமைப்பதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Salary And Cost Of Living Allowance For Pensioners

இதேவேளை, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.