அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அடிப்படை சம்பளம் குறைந்த தரங்களுக்கு 24% ஆகவும், மற்ற பதவிகளுக்கு 24% முதல் 50% ஆகவும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பளத்தை அதிகரிக்கும் போது தகுதி, அனுபவம் மற்றும் அவர் தற்போது செய்து வரும் பணி குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம் | Increase In Basic Salary Of Government Employees

இதேவேளை, அரச சேவையின் அடிப்படை சம்பளம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.