இலங்கையில் இந்த மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம்!

இலங்கையில் இந்த மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம்!

இரத்தினபுரியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2198 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இரத்தினபுரியில் டெங்கு நோய் தொற்று நோயாக பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இந்த மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம்! | Risk Of Dengue Infection Spread In Ratnapura

அதன்படி, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் வழிகாட்டலின் பேரில்,

இம்மாதம் 28 ஆம் திகதி இரத்தினபுரி முழுவதும் அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தினரின் பங்களிப்புடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.