வீதிஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்; விசாரணையில் பகீர் தகவல்

வீதிஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்; விசாரணையில் பகீர் தகவல்

  சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பிங்கிரிய, மூகலன்ஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வீதிஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்; விசாரணையில் பகீர் தகவல் | Dead Body Of A Woman Lying On The Roadside Silapam

கொலை செய்யப்பட்ட பெண் ,விலத்தவ வீதியின் ஓரத்தில் சடலமாக கிடந்ததாக அவரது மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். மகளின் கணவர் உயிரிழந்த பெண்ணை தேடிச் சென்ற போது நபர் ஒருவர் பெண் ஒருவரை தூக்கிச் செல்வதை பார்த்துள்ளார்.

மோட்டார் சைக்களில் வௌிச்சத்தில் குறித்த நபரை இனங்கண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி செயற்பட்ட பொலிஸார் நேற்று சந்தேகநபரை கைது செய்து சிலாபம் பொலிஸில் ஆஜர்படுத்தினர். கைதான சந்தேக நபர் வீரபொகுன பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.