மா ஓயாவை கடக்கும்போது பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

மா ஓயாவை கடக்கும்போது பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

கம்பஹா நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் மா ஓயாவை கடக்க முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய நால்ல, திவுல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மா ஓயாவை கடக்கும்போது பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் | Person Tragically Drowned While Crossing Ma Oya

உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் மா ஓயாவை கடக்கும்போது நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் வத்துபிடிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.