கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி!

கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி!

கொரோனா வைரஸின் உலக பரவல் தாக்கமானது, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழு, கொவிட்-19 தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்ட மதிப்பாய்வு அறிக்கையை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது

.உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள் 18 பேரையும், ஆலோசகர்கள் 12 பேரையும்; உள்ளடக்கிய அவசரநிலை குழு, கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பமானதன் பின்னர், நான்காவது தடவையாக நேற்றிரவு ஜெனிவாவில் கூடியது

நூற்றாண்டுக்கு ஒரு முறை சுகாதார நெருக்கடி நிலை ஏற்படும் நிலையில், கொவிட்-19 தொற்றின் தாக்கமானது அடுத்துவரும் பல தசாப்தங்களுக்கு உலகில் நீடி;க்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.