நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு : வெளியான தகவல்

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு : வெளியான தகவல்

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் பின்னர் எரிபொருள் விலை இன்று திருத்தப்படாது என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.