தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

32 தொடருந்து சுரங்கங்களின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தொடருந்து மார்க்கத்தின் கண்காணிப்பு முகாமையாளர்களினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மலையக தொடருந்து மார்க்கத்தின் நாவலப்பிட்டியிலிருந்து பதுளை வரையான தொடருந்து சுரங்கங்களின் தரம் ஆராயப்படவுள்ளன.

இதன்படி, தொடருந்து சுரங்கங்களில் காணப்படும் நீர் கசிவு, தொழில்நுட்ப கோளாறுகள், வெடிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.