யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்!

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்!

யாழ்ப்பாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒன்றுக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்! | Jaffna Mother Dies Daughter Refuses Appear Exam

மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 10ஆம் திகதி மகள் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லாவிட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்! | Jaffna Mother Dies Daughter Refuses Appear Exam

 

அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்! | Jaffna Mother Dies Daughter Refuses Appear Exam

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.