யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்ப பெண் : கடனால் ஏற்பட்ட விபரீதம்

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்ப பெண் : கடனால் ஏற்பட்ட விபரீதம்

யாழில் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள பெறமுடியாமல் மனமுடைந்தமையினால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண் தனது நண்பி பண கஷ்டத்தில் இருந்தமையினால் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார்.

பண உதவியை பெற்றுக்கொண்ட நண்பி பணத்தினை மீள செலுத்தாத நிலையில் வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்குள்ளாகி மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து,  நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் மற்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாகவும் அவர் பதிவிட்டு பின் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.