யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தாய் பலி

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தாய் பலி

யாழ்ப்பாணத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர்  தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று முன்தினம் (02) குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார்

இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தாய் பலி | Mother Of 3 Children Killed By Wasp Sting Jaffna

குறித்த பெண் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவர்மீது கொட்டியது.

இந்நிலையில் அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தாய் பலி | Mother Of 3 Children Killed By Wasp Sting Jaffnaசடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.