யாழில் அதிர்ச்சி சம்பவம்... சுவிஸில் வசிக்கும் கணவனின் கண்முன்னே உயிரை விட்ட இளம் குடும்பப் பெண்!

யாழில் அதிர்ச்சி சம்பவம்... சுவிஸில் வசிக்கும் கணவனின் கண்முன்னே உயிரை விட்ட இளம் குடும்பப் பெண்!

யாழ்ப்பாண பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது கணவனின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி லகிதா என்ற 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்... சுவிஸில் வசிக்கும் கணவனின் கண்முன்னே உயிரை விட்ட இளம் குடும்பப் பெண்! | Wife Commits Suicide Front Of Her Husband Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்ற நிலையில் அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் கணவனின் கண்முன்னே தூக்கிட்டுள்ளார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்... சுவிஸில் வசிக்கும் கணவனின் கண்முன்னே உயிரை விட்ட இளம் குடும்பப் பெண்! | Wife Commits Suicide Front Of Her Husband Jaffnaஇதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.