ஆசை வார்த்தைகள் கூறி யாழ்ப்பாண இளைஞரை மோசம் செய்த பெண்!

ஆசை வார்த்தைகள் கூறி யாழ்ப்பாண இளைஞரை மோசம் செய்த பெண்!

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட மானிப்பாய் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி   இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி யாழ்ப்பாண இளைஞரை மோசம் செய்த செய்த பெண்! | The Woman Fraud The Jaffna Youth Abroad

நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்டுள்ளார்.

எனினும் பெண் பணத்தை கொடுக்க மறுத்ததால், இளைஞன் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

அவரது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் இது போன்று வெளிநாடு செல்வதற்காக பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.