தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி: வெளியான தகவல்

தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி: வெளியான தகவல்

மர்மமான முறையில் காணாமல் போன பெண் மயங்கிய நிலையில் திருகோணமலை (trincomale) சல்லி கோவிலுக்கு அருகில்  மீட்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் (israel) நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதான தாமர் அமிதாய் என்ற இளம் யுவதியே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு (srilanka) வந்த இஸ்ரேலிய யுவதி, திருகோணமலை (trincomale) பகுதியில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த போது காணாமல் போய் இருந்தார்.

இவ்விடயம் குறித்து நேற்று ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணி நேரத்திற்குள் அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் மீட்டு எடுத்துள்ளனர். .

குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.