ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை

ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை

கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தைகள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், முருங்கைக்காய் ஒரு கிலோகிராம் விலை 1,100 ஆகவும், கிழங்கு ஒரு கிலோகிராம் 900 – 1,000 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 900 ரூபாயாகவும் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.