7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை கலால் திணைக்களம் (Excise Department of Sri Lanka) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு | Bars Will Be Closed For 7 Days Poson Poya Festivalஇதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காலப்பகுதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.