பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை  (04.06.2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  பற்றிக் டிரஞ்சன் அறிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள் இன்று (03/06/2024) கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Notification For New Graduate Teachers

ஆகவே நாளை பாடசாலை தினத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.