இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை

பதுளை பசறை டெமேரியா பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடொன்று தீவைத்து முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டெமேரியா தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 25 மற்றும்30 வயதுடைய இருவர் எனவும் ஞாயிற்றுக்கிழமை (2024.05.19) இரவு சுமார் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை | Argument Turned Fistfight Both Were Hospitalized

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் குறித்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை | Argument Turned Fistfight Both Were Hospitalized

அத்துடன் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்த இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.