அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என அதிபர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Ranil About Government Employees Salaryஇந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.