நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்துள்ளது என்பதுடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2810 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 482 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.