
பாதாள உலகக் குழுக்களை முற்றாக இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி உறுதி!
நாட்டுக்குள் காணப்படும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரின் பல்வேறு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.