தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

எதிர்வரும் 2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையானது ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் முடிந்த பின்னர், ஆகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களும் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு அனுதிக்கக்கூடாது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.