சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

நேற்று முன்தினம் (15) மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் அலையில் சிக்கி நேற்று (16) பிற்பகல் அளுத்கம மொரகல்ல கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மொஹமட் சமீன் என்ற 16 வயது மாணவர் ஆவார். இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருடன் பெந்தோட்டை உல்லாச விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை மற்றும் அளுத்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.