தீக்கிரையாகிய தொழிலாளர் குடியிருப்பு! 75 பேர் நிர்க்கதி

தீக்கிரையாகிய தொழிலாளர் குடியிருப்பு! 75 பேர் நிர்க்கதி

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக் காரணமாக 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.

அயலவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து சுமார் 1 மணித்தியாலயத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த 75 பேரும் தற்காலிகமாக தோட்டக் கலாச்சார மண்டபம், முன்பள்ளி மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை ஆகியன ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டமைகான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. என்பதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.