வவுனியாவில் காலையில் இடம்பெற்ற கோர சம்பவம்!

வவுனியாவில் காலையில் இடம்பெற்ற கோர சம்பவம்!

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்றைய தினம் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஓமந்தை பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா புதுக்குளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தங்கராஜா பால்ராஜ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் டிப்பர் வாகனத்தின் சாரதியும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதோடு, டிப்பர் குடைசாய்ந்ததில் அதன் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.