வடக்கிற்கு விசேட கவனம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கிற்கு விசேட கவனம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் தற்போது தனி நிர்வாகம் நடைபெறுவதால் அங்கே அதிக கவனம் செலுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரசாரத்தின் போதான ஊடக அறிக்கையிடல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,

எந்தவகையான ஊடகங்களும் எதிர்வரும் 3ஆம் 4ஆம் திகதிகளில் விளம்பரமோ அல்லது ஊக்கமளிக்கும் விடயங்களையோ பிரசுரிக்க முடியாது.

இருப்பினும் வடக்கு மாகாணம் தனி நிர்வாகமாக செயற்படுவதால் இம்முறை விசேட கவனம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.