ஜனாதிபதியிடம் இருந்து மற்றுமொரு நற்செய்தி

ஜனாதிபதியிடம் இருந்து மற்றுமொரு நற்செய்தி

நாட்டில் உள்ள அனைத்து குளங்களையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக உரிய முறையில் குளங்கள் மற்றும் கால்வாய் கட்டமைப்புகள் புனரமைக்கப்படாமை குறித்து மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

விவசாயத்திற்கும் நாளாந்த வாழ்விற்கும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு அவற்றுக்கு தீர்வாக முறையான மற்றும் உரிய தரங்களுடன் கூடிய திட்டமொன்றுடன் அனைத்து குளங்களும் புனரமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.