
இன்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த நான்கு பேரும் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 650 தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.