கடல் வழி போக்குவரத்தின் ஊடாக 2,200 பேர் உயிரிழப்பு.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ஆபத்தான கடல் வழி போக்குவரத்தின் ஊடாக 2,200 பேர் வரையில் உயிரிழந்ததாக ஏதிலிகளுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களில் பலியானவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.