
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் இன்று (11) தீ விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.