31 குடும்பங்களின் உயிரை காப்பாற்றிய நாய்.
ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் நேற்று (20) காலை பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசித்து வந்த 31 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
அங்குள்ள ஒரு வீட்டில் காலை 6.00 மணியளவில் நாய் ஒன்று குரைத்ததையடுத்து, அப்பகுதியினர் விசாரணை மேற்கொண்டபோது பள்ளம் இருப்பதை கண்டுள்ளனர்.
இது தொடர்பில் தோட்ட அத்தியட்சகர் அனர்த்த திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்து 31 குடும்பங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

குறித்த குடும்பங்கள் தங்காமலே தோட்டப் பாடசாலையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனர்த்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து அனர்த்த அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த தோட்டத்தின் லைன் 10ல் உள்ள மக்கள் பல வருடங்களாக மழைக் காலங்களில் இவ்வாறு வெளியேறி வருவதாக தெரிவித்தனர்.