ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த மகன் - தந்தை! இலங்கையில் பெரும் சோகம்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த மகன் - தந்தை! இலங்கையில் பெரும் சோகம்.

புத்தளம், கற்பிட்டி - நுரைச்சோலை வீதியில் ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (20-10-2023) உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (19-10-2023) ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த மகன் - தந்தை! இலங்கையில் பெரும் சோகம் | Kalpitiya Vehicles Accident Son And Father Deadஇந்த விபத்து சம்பவத்தில் கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்த 36 வயதான வர்ணகுலசூரிய யின் நிசாந்த எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த விபத்து கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக லொறியொன்றும், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த மகன் - தந்தை! இலங்கையில் பெரும் சோகம் | Kalpitiya Vehicles Accident Son And Father Dead குறித்த மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த 5 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, விபத்தில் காயமடைந்த சிறுவன் நேற்றிரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த மகன் - தந்தை! இலங்கையில் பெரும் சோகம் | Kalpitiya Vehicles Accident Son And Father Deadமேலும், விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த சிறுவனின் தந்தையே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் குறித்த சிறுவன் வாழ்ந்து வந்த நிலையில் சிறுவனும், தந்தையும் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விபத்தில் நேற்று உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று அம்மம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.