இலங்கையில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சிக்கியது..!

இலங்கையில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சிக்கியது..!

மிகவும் அரிய வகை வலம்புரியை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற மாலபே பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (17) பிற்பகல், வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையால் இதுவரை கைது கைப்பற்றப்பட்ட வலம்புரிகளில் அதிக பெறுமதியான வலம்புரி இது என வலான ஊழல் எதிர்ப்புப் படை தெரிவித்துள்ளது.

வலான ஊழல் ஒழிப்புப் படையின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த வலம்புரியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சிக்கியது | One Was Caught With A Rare Type Of Valampuri

வியாபாரிகள் போல் வேடமணிந்து வந்த வலான ஊழல் தடுப்பு படை அதிகாரிகள், சந்தேகமடைந்த கார்காரரிடம், இந்த வலம்புரியை வாங்கி தருமாறு கூறினர். ஆரம்பத்தில் 35 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டபோதிலும் இந்த வலம்புரி, பின்னர் 30 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

பின்னர் நேற்று காலை வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மாலபே பகுதியில் வைத்து சந்தேக நபரை வலம்புரியுடன் கைது செய்துள்ளனர்.

இந்த வலம்புரியை கண்டி பிரதேசத்தில் தனக்கு வழங்கி அதனை விற்று தந்தால் பணம் தருவதாக உறுதியளித்ததாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சிக்கியது | One Was Caught With A Rare Type Of Valampuri

இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க வீரசிங்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.