கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி...!

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி...!

அனைத்து அரச பாடசாலைகளிலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கான  சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தபடும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கமைய இதுவரையில் காப்புறுதிக்காக விண்ணப்பிக்காதவர்கள், முழுமையான தகவல்கள் அடங்கிய விண்ணப்பங்களை அந்த பகுதியிலுள்ள வலயகல்வி பணிமனை அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக 011 2784 164, 011 2784 872 அல்லது 011 364 1555 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்த முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.