லைட்டர் வெடித்து குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்...

லைட்டர் வெடித்து குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்...

லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - பளை - இந்திராபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயந்தன் கேதீஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.06.2023) இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.

லைட்டர் வெடித்து குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம் | Woman Dies In Kilinochchi After Lighter Explodesஎரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்றைய தினம் (29.06.2023) உயிரிழந்துள்ளார்.