
யாழ்ப்பாணத்தில் இளம் அர்ச்சகர் போதையால் பலி!
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் - நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளார்.
ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொரிய பெண்களின் இளமைக்கு பின்னால் இருந்து வேலை பார்க்கும் பேஸ் பேக்!
27 September 2023
இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாதாம்...
25 September 2023
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023