வலையில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு
புலத்கொஹுபிட்டிய - இஹல உடுவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் வலையில் சிக்கிய சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
சுமார் 5 வயதுடைய ஐந்தரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேகாலை நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
வலையை விரித்தவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.