பல்கலைகழத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பல்கலைகழத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் (Online) ஊடாக அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையின் மூலம் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமரதுங்க கூறினார்.

தகவல் திணைக்களத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, 2021 உயர்தரப் பெறுபேறுகளின்படி 42,519 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர், அவர்களில் 2,035 மாணவர்கள் மருத்துவ பீடங்களுக்கும் 2,238 மாணவர்கள் பொறியியல் பீடங்களுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.