ஃபேஸ்புக் மூலம் காதல்: திருமண தினத்தில் மணமகளை அரை நிர்வாணப்படுத்திய மணமகனால் பரபரப்பு

ஃபேஸ்புக் மூலம் காதல்: திருமண தினத்தில் மணமகளை அரை நிர்வாணப்படுத்திய மணமகனால் பரபரப்பு

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த ஒருவர், மணமேடையில் மணமகளை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார் என்பவருக்கு பேஸ்புக் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதனை அடுத்து அலோக் குமார் அந்த பெண்ணை நேரில் வரவழைத்து தனது தாய் மாமா வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது மணமகளை ஒரு நபர் கூர்ந்து பார்த்து இவர் பெண்ணல்ல, ஆண் வேஷம் போட்டு ஏமாற்றும் நபர் என்பதை கண்டுபிடித்தார்.

இதனை அடுத்து மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்து மணமகளை விசாரித்தபோது அவர் உண்மையில் பெண் வேடமிட்ட ஆண் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி தர்ம அடி கொடுத்த மணமகன் வீட்டார் அதன் பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர்களின் விசாரணையில் பேஸ்புக் மூலம் பெண் வேடம் போட்டு அந்த நபர் பலரை ஏமாற்றியது தெரிய வந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.