ஜனாதிபதியின் வருகை குறித்து சிங்கப்பூர் விளக்கம்

ஜனாதிபதியின் வருகை குறித்து சிங்கப்பூர் விளக்கம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில்லை என்றும் அது குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.