சி.டி.விக்ரமரத்ன சிஐடியில் இருந்து வெளியேறினார்

சி.டி.விக்ரமரத்ன சிஐடியில் இருந்து வெளியேறினார்

காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கி பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருன ஜயசுந்தர மற்றும் காவல்துறை விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் டி.சி.ஏ தனபால ஆகியோர் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.