ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 1.30 வரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.