இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது நிச்சயம் - விராட் கோலி

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது நிச்சயம் - விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவதற்காக முயன்று கொண்டிருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த  27-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்5 விக்கெட்டுக்கு 189 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல் 55 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
அடுத்து ஆடிய டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்தபின் தினேஷ் கார்த்திக்கிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இதுபோன்ற நேர்காணலை அதிகம் செய்யவில்லை. இன்று இதை செய்வதற்கு ஒரு சிறப்பான இரவு. இதுவரை இந்த தொடரின் 'மேன் ஆப் தி ஐபிஎல்' நாயகனுடன் நான் இங்கே இருக்கிறேன்.

அவர் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பெங்களூருவுக்காக மட்டுமல்ல, இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.

உங்கள் ஆட்டத்தைப் பார்த்து ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் பெருமைப்படுவார் என புகழ்ந்து பேசியுள்ளார்.