உந்துருளி, முச்சக்கரவண்டிகளுக்கு மாற்றீடாக இலங்கையில் உருவாகும் புதிய வாகனம்

உந்துருளி, முச்சக்கரவண்டிகளுக்கு மாற்றீடாக இலங்கையில் உருவாகும் புதிய வாகனம்

உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக, உள்நாட்டில் நான்கு சக்கர வாகனமொன்று உருவாக்கப்பட்டுள்ளது

இந்த வாகனம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 இலட்சம்  ரூபாவுககு அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறித்த உள்ளூர் நிறுவனம் கூறுகிறது.

இந்த வாகனத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்றும்  200சிசி இயந்திர வலு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 814 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய இயலுமை குறித்த வாகனம் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.