
நீதி அமைச்சர் எடுத்துள்ள முடிவு
போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கான கால எல்லை இரண்டு வாரங்களாக குறைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் இருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு சுமார் 08 மாதங்கள் ஆனதாகவும் அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தகைய அறிக்கைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.