நாராங்ஹின்ன பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

நாராங்ஹின்ன பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

தெல்தோட்டை - நாராங்ஹின்ன பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்த ஆண் ஒருவர் பலியானார்.

கித்துல் மரமொன்றில் ஏறிய நிலையில், அவர் தவறி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.