கொழும்பின் பல பாகங்களில் 9 மணித்தியால நீர்விநியோகத்தடை

கொழும்பின் பல பாகங்களில் 9 மணித்தியால நீர்விநியோகத்தடை

கொழும்பின் பல பாகங்களில், இன்றிரவு 11 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை, 9 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 9, 10, 11, 12, 13 மற்றும் 14 முதலான பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர் வழங்கல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.