இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை அவதானம்

இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை அவதானம்

கங்கைகள், ஆறுகள் மற்றும் ஓடைகள் போன்ற இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் நோக்கில் புதிய சுற்றுச்சூழல் குழுக்களை நியமிப்பது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி நாட்டிலுள்ள சகல கங்கைகள், குளங்கள், ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் தன்னார்வ சுற்றுச்சூழல் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதற்காக கிராமங்களுக்கு அருகிலுள்ள இளைஞர் யுவதிகளை பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.